Thursday, November 29, 2012

பொன்மொழி

என் பள்ளி நாட்களில் காலை ப்ரேயரில் மாணவர்கள் பொன்மொழி சொல்வது வழக்கம். வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொரு மாணவனின் முறை வரும். தெய்வசிகாமணி என்கிற என் வகுப்பு தோழன் என்னிடம் வந்து அவன் நாளை ப்ரேயரில் சொல்வதற்கு எளிதான பொன்மொழி ஒன்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். நானும் ”மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்கிற பொன்மொழியை சொல்லி கொடுத்தேன். விடுதியில் இரவு முழுவது அதை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

காலை ப்ரேயர்

மாணவர்களும், ஆசிரியர்களும் குழுமியிருந்தனர்.

தெய்வசிகாமணி தன் திருவாய் மலர்ந்தான்..

”பொன்னுவதெல்லாம் மின்னல்ல”

No comments:

Post a Comment