Thursday, January 5, 2012

தோஷம்

சர்ப்பம் நெளியும்
ஊர்ந்து முகம் உரசும்
க‌ன‌வில்
தொட‌ர்பின்றி துர‌த்தும்
வால்க‌ளின் இடுக்கில்
புர‌ளும் நீண்ட‌ முடிக்க‌ற்றை.
தேக‌ம் மின்ன‌
வ‌ரி வ‌ரியாய் வ‌ன‌ப்பாய்
கால்க‌ள் த‌ழுவி
விர‌லிடுக்கில் உற‌க்கம்
செந்தீ முனை நாக்கு
திசை தேடிய‌ ப‌ய‌ண‌த்தில்
என்னிதழ் ப‌ற்றி
உமிழ் நீர் ப‌ருகிய‌
கீற‌லும் உரிந்த‌ ப‌ச்சை
தோல் மிச்ச‌மும்
விடிந்த பின் சொன்னாள்
நீண்டு வ‌ளைந்த‌ காத‌ணி
தொலைந்து போயிற்றென்று

No comments:

Post a Comment