Thursday, January 5, 2012

உனக்கானவை

நீண்ட இடைவெளியை கடந்து
கவிதை எழுதுகிறேன்.
மொழியில் சரளம்
சற்றே பிடிபட மறுக்கிற‌து
வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொண்ட முள்ளாய்
முரண்டு பிடிக்கிறது
எதுகையும் மோனையும்
எதிரெதிரே ப‌யணிக்கின்ற‌ன‌.
ச‌ந்திப் பிழைக‌ளும்
ச‌ந்த‌ப் பிழைக‌ளும்
ச‌க‌ஜ‌மாகி விட்டன
இல‌க்க‌ண‌ம் சேராத
வரிக‌ள் என்றாலும்
அழ‌காய் இருக்கிற‌து
உன்னை ப‌ற்றிய‌
க‌விதை.

No comments:

Post a Comment